Friday 25 December 2015

சிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம்


சிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம் என்று பலரும் பல விசயங் களை கூறிவரும் வேலையில், அந்த கோயிலில் இருக்கும் அறிவியல், பொ றியியல், புவியியல், கணிதவியல், மருத்துவ வியல் குறித்த ஆச்சரியங்க ளின் சில தகவல்கள்.

முன்னோர்கள் செய்த எல்லா செயல் களும் ஒரு தெளிவான சிந் தனையை நோக்கியே பயணித்துள்ளது, சிதம்பர ம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற் புதமான ரகசியங்கள் இவைகள்தான்.”

(1) இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Centre Point of World’s Magnetic Equator ).
(2)பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறி க்கும் தில்லை நட ராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத் தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUTE ) அமைந்துள்ளது, இன்று google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லி யம் அன்றை க்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல், புவியியல் மற் றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம்.

(3) மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக் கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உட லில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.
(4) விமானத்தின்மேல் இருக்கும் பொற்கூரை 21,600 தங்கத்தகடு களை கொண்டு வேயப்பட்டுள் ளது, இது மனிதன் ஒரு நாளை க்கு சராசரியாக 21600 தடவை கள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கி ன்றது (15*60*24 = 21,600).

(5) இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத் தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இரு க்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது. இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்ப வையும் அடங்கும்.

(6) திருமந்திரத்தில் ” திருமூலர்”

மானுடராக்கை வடிவு சிவலிங்கம்
மானுடராக்கை வடிவு சிதம்பரம்
மானுடராக்கை வடிவு சதாசிவம்
மானுடராக்கை வடிவு திருக்கூத்தே

என்று கூறுகிறார், அதாவது ” மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்ப ரம், அதுவே சதாசிவம், அதுவே அவரி ன் நடனம்”. என்ற பொருளைக் குறிகி ன்றது.


(7) “பொன்னம்பலம்” சற்று இடது புற மாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும்.இந்த இடத்தை அடை ய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை “பஞ்சாட்சர படி” என்று அழைக்கப் படுகின்றது, அதாவது “சி,வா,ய,ந,ம” என்ற ஐந்து எழுத் தே அது. “கனகசபை” பிற கோயில் களில் இருப்பதை போன்று நேரான வழி யாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின் றது . இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை குறிக் கின்றது,

(8)பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங் களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கி ல் செல்லும் பல பலகைகள் (CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது.

(9) பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது. அர்த்த மண்ட பத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திர ங்களையும், அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கி ன்றது.
(10) சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண் டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் “cosmic dance” என்று பல வெளிநாட்டு அறிஞர்க ளால் அழைக்கபடுகின்றது.

CERN அராய்ச்சிக் கூடத்தில் நடராஜர்!
சிதம்பரம் கோவிலில் நடனக் கலையின் அரசனான சிவன் ‘நடராஜன்’ என்ற சிலை வடிவில் இருக்கின்றான். அணுவைப் பிளந்து மேற்கொள்ளும் ஆராய்ச்சி உலகிலேயே அங்குதான் நடைபெறுகின்றது. அந்த பரிசோதனைச் சாலையின் வாயிலில் நடராஜரின் சிலைவடிவம் வைக்கப்பட்டிருந்தது. ஏனெனில் அணுக்கூறுகளின் இயக்கங்களை ஒத்திருக்கும் மனித கலாச்சார விஷயத்தில் நடராஜரின் நடன வடிவமே அதற்குப் பொருந்தியுள்ளதாக விஞ்ஞானிகள் கண்டுள்ளனர்.


ஆகாய உருவில் இறைவன்!


சிதம்பர ரகசியம் என்பது, சிதம்பரத்தில் மிக முக்கியமானதாகும். சிற்சபையில், சபாநாயகரின் வலது பக்கத்தில் உள்ளது, ஒரு சிறு வாயில். இதன் திரை அகற்றப்படும்போது, கற்பூர ஆரத்தி காட்டப்படும். இதனுள்ளே, திருவுருவம் ஏதும் இல்லை. தங்கத்தினாலான, வில்வ தள மாலை ஒன்று சுவரில் தொங்கவிடப்பட்டுக் காட்சி அளிக்கும். மூர்த்தி ஏதும் இல்லாமலேயே, வில்வ தள மாலை தொங்கும். இதன் ரகசியம், இங்கு இறைவன் ஆகாய உருவில் இருக்கிறார் என்பதை உணர்த்துவதே! அகண்ட பெருவெளியில் நிறைந்திருக்கும் இறைவனை, வெறும் வெளியையே காட்டி, இங்கு வழிபட வகை செய்யப்பட்டுள்ளது. இது தான், 'சிதம்பர ரகசியம்' என, அனைவராலும் போற்றி வழிபாடு செய்யப்படுகிறது.

Saturday 19 September 2015

உலகின் முதல் கண் தானம் | அறுபத்து மூவர் வரலாறு பகுதி – 19

ரத்தம் வடிந்துக் கொண்டிருந்த சுடர்விழியனின் அந்த ஒரு கண்ணில் தன் கைகளால் துடைத்து பார்த்தான். ஆனாலும் ரத்தம் வந்துக்கொண்டேதான் இருந்தது. குடுமி சாமியை காயப்படுத்தியது யார் என கோபம் கொண்ட திண்ணன், பிறகு ஏதோ யோசித்தவனாக, வெளியே ஒடி சென்றான். ஒரு சில நிமிடங்களில், வில் அம்பினால் காயம்பட்டால் வனவேடர்கள் வழக்கமாக மருந்தாக பயன்படுத்தும் அரிய வகை மூலிகையை பறிந்துக்கொண்டு ஓடி வந்தான். அதனை தம் இரு கரங்களால் கசக்கி ரத்தம் வடியும் சுடர்க்கண்ணனான ஈசனின் கண்ணில் ஊற்றினான். அவன் முயற்சிக்கு மரியாதை தரும் விதமாக சிவபெருமான் தம் கண்ணில் இரத்தம் வடிவதை ஒரு சில விநாடிகள் மட்டும் திண்ணன் மகிழ்வதற்காக நிறுத்திக்கொண்டார். ஆனால் மீண்டும் இரத்தம் சொட்ட ஆரம்பித்தது. முன்னிலும் அதிகமாக. இரத்தம் நின்றிருந்த அந்த ஒரு சில விநாடிகள் நிம்மதியடைந்த திண்ணன் மீண்டும் இரத்தம் வருவதை கண்டு வேறு வழியை யோசித்தான். முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும் என்று தீர்மானித்து, யவராலும் யூகிக்க முடியாத ஒரு மருந்தை கண்டுபிடித்தான். ஆம். குடுமி சாமியின் கண் நோய்க்கு தம்முடைய கண்ணே மருந்து என உறுதியாக நம்பினான். ஒரு அம்பை எடுத்து தன்னுடைய ஒரு கண்ணை தோண்டி எடுத்து சிவலிங்கத்தின் புண்பட்ட கண்ணில் தன் கண்ணை அப்பினான்.

அடுத்த விநாடியே ஈசனின் கண்ணில் வழிந்துக்கொண்டிருந்த இரத்தம் நின்றது. அவன் செயலை நேரடியாக கண்ட சிவகோச்சாரியார் அதிர்ந்தே போனார். இத்தனை நாள் நாம்தான் சிறந்த சிவபக்தன் என்று நினைத்து, என்னையே நான் ஏமாற்றி வந்தேனே. இதோ… இவன் தான்… இந்த திண்ணன்தான் சிறந்த சிவபக்தன் என்று ஆனந்தம் அடைந்தார். “சரி இன்னும் என்னதான் நடக்கிறது என்று பார்ப்போம்” என்று தன் முன்னால் நடந்துக்கொண்டிருக்ககும் அதிசய காட்சியை தொடர்ந்து மறைந்து நின்றபடியே கவனித்தார் சிவகோச்சாரியார். தன் கண்ணை குத்தி எடுத்து சிவலிங்கத்தின் கண்ணில் பதித்த அடுத்த விநாடியே ஈசனின் கண்ணில் வழிந்துக்கொண்டிருந்த இரத்தம் நின்றதை பார்த்த திண்ணன் மகிழ்ந்தான். ஆனந்த கூத்தாடினான். வாய் விட்டு கம்பீரமாக சிரித்தான். குடுமி சாமிக்கு தன்னுடைய கண்ணை “தானமாக“ வழங்கிய பெரும் மகிழ்ச்சியில் தன் வலியை மறந்தான் திண்ணன். ஆனால் – கயிலைமன்னன் – காளத்திநாதன் மீண்டும் நாம் திருவிளையாடல் புரிந்தால் என்ன? என யோசித்தானோ அல்லது காளத்தி வேடனான திண்ணனின் சிவதொண்டை உலகுக்கு உணர்த்த இந்த புகழ் போதாதே என்று கருதினானோ என்னவோ? குடுமி சாமி இப்போது தமது இடது கண்ணில் இருந்து ரத்தம் வடியும்படி செய்துக்கொண்டார். “குடுமி சாமியின் வலது கண்ணில் ரத்தம் வடிவது நின்றது என்றால், இப்போது இடது கண்ணில் இருந்து ரத்தம் வடிகிறதே“ என்று அதிர்ச்சி அடைந்தான் திண்ணன். மறுகணமே – சற்றும் தாமதிக்காமல், “ஒன்றும் பிரச்னையில்லை.. எனக்குதான் மற்றோரு கண் இருக்கிறதே.. அதையும் தோண்டி குடுமி சாமிக்கு வைத்தால் இரத்தம் நிற்றுவிட போகிறது..

குடுமி சாமி கவலைப்படாதே என்னுடைய இன்னொரு கண்ணையும் உனக்கே தருகிறேன். இப்போது எல்லாம் சரியாகிவிடும்” என்று தன் நண்பனிடம் பேசுவதை போல் பேசிய திண்ணன், தன் இன்னொரு கண்ணையும் தோண்டி எடுத்த பிறகு அதனை குடுமி சாமியின் இடது கண்ணில் சரியாக பொருத்த வேண்டுமே என்பதால், தன் இடது கால் பாதத்தை இரத்தம் வடியும் ஈசனின் கண்ணில் ஊன்றி கொண்டு தன் இன்னொரு கண்ணையும் அம்பால் தோண்டி எடுப்பதற்கு முயன்றான். இதற்கு மேல் திண்ணணை சோதிக்க விரும்பாத சிவபெருமான், “கண்ணப்பா நில், நில் கண்ணப்பா, நில் கண்ணப்பா” என்று மூன்று முறை சொல்லி திண்ணனின் கையை பிடித்துக் கொண்டு தடுத்தான் முக்கண்ணன். இந்த அற்புத நிகழ்வை மறைந்திருந்த பார்த்த சிவகோச்சாரியரின் கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வடிந்தது. “ஒரு வனவேடனுக்கு இருக்கும் அளவுக்கு சிவபக்தி தனக்கு இல்லையே. இவனே உண்மையான சிவபக்தன்.” என்று வனவேடனான திண்ணனை, இல்லையில்லை… சிவபெருமானால் பெயர் சூட்டபட்ட கண்ணப்பரையும் வணங்கினார் சிவகோச்சாரியார். “கண்ணப்பா.. உமது கண் எனது வலது கண்ணில் இருப்பதால், நீ இன்றுமுதல் எமது வலப் பக்கத்தில் நிற்பாயாக.” என்று அருளினார் பிறவாப்பெரியோனான சிவபெருமான்.

இறைவனுக்கே தன் கண்ணை தந்ததால், முதன் முதலில் கண் தானம் செய்த பெருமையும் கண்ணப்ப நாயனாருக்கே உண்டு. திருகாளத்திநாதனை நாம் வணங்கும்போது பெருமானின் வலது பக்கத்தில் கண்ணப்ப நாயனாரும் நமக்கு அருள்பாலிக்கிறார் என்பதையும் நினைத்து மறக்காமல் போற்றுங்கள் – வணங்குங்கள்.

Read More at: bhakthiplanet.com/2015/09/arubathu-moondru-nayanmargal-kannappa-nayanar-part-19/ © BHAKTHIPLANET.COM

தீய சகுனங்களை எதிர்கொண்ட திண்ணன் | அறுபத்து மூவர் வரலாறு – பகுதி 18

மறுநாள் சூரியன் மெல்ல கிழக்கில் எட்டி பார்த்து, பின் பிராகசித்து எழுந்தது. உணவுக்காக வேட்டைக்கு சென்றான் திண்ணன். திண்ணன் சென்ற சில மணி நேரத்தில் சிவகோச்சாரியார் வழக்கம்போல் திருகாளத்தி மலைக்கு வந்தார். சிவலிங்கத்தின் அருகே மாமிசத்தை கண்டார். “எவனோ வனவேடன் மாமிசத்தை படைக்கிறானே? இது என்ன கொடுமை?” என்று மனம் வருந்தினார். பொதுவாக, நம் நாட்டுக்கு என ஒரு பழக்கம் உண்டு, பக்கத்து நாட்டுக்கு என்று ஒரு பழக்க வழக்கம் இருக்கும். இவற்றில் எது சரி – எது தவறு? என்று அந்த நாட்டவர்க்கு பக்கத்து நாட்டவரின் சட்டம் தெரியாது. அதுபோல்தான் திண்ணனை பொறுத்தவரை, தாம் செய்வதே சரி என்று நினைத்தான். ஆனால் சிவகோச்சாரியாரோ, ஆச்சாரத்தை அனுசரித்து வாழ்பவர் அல்லவா? அதனால் மாமிச படையலை அபச்சாரமாக கருதினார். “ஈஸ்வரா.. .தினமும் எவனோ ஒரு வனவேடன் உன் சந்நதியில் மாமிசத்தை வைத்து விட்டு செல்கிறானே.. அவனை தண்டிக்கமாட்டியா?“ என்று கதறினார். மனஅமுத்தத்துடனும், மிகுந்த மனபாரத்துடனும் தன் இல்லத்திற்கு திரும்பினார் சிவகோச்சாரியார்.

அன்றிரவு – கண்களில் நீர் சொரிய உறங்கினார் சிவகோச்சாரியார். அப்போது அவர் கனவில் சிவபெருமானான சோதியன் தோன்றி, “நீ எமக்கு சமர்ப்பிக்கும் மலர்களை தன் கால்களால் நீக்குவது எமது திருகுமரனே. அவன் பாதம் நமக்கு மலர்களை விட மெருதுவனானதே. அவன் வாயிலிருந்து உமிழும் நீர் கங்கை நீரை விட தூய்மையானது. அவன் தன் குடுமியில் வைத்த மலர்களை எமக்கு அனிவிக்கும் போது திருமால், Bhakthi Planetபிரம்மன் அணிவித்த மலர்களும் ஈடாகாது. அவன் சமைத்த இறைச்சியை அவனே அவன் வாயில் சுவை பார்த்த பிறகு எமக்கு படைக்கும் அந்த இறைச்சி வேத விதிப்படி வேள்விகளில் வேதியர்கள் முதலில் கொடுக்கும் அவிர் பாகத்தை விட எமக்கு திருப்தியாக இருக்கிறது. அவன் தூய்மையான அன்புக்கு நிகர் ஏது? அதை நீயே நாளை தெரிந்துக் கொள்வாய். நாளை நீ இந்த உண்மையை மறைந்திருந்து காண்பாயாக” என்று சிவகோசாரியரின் கனவில் சொல்லற்கரியான் சொல்லி மறைந்தார்.

சிவகோச்சாரியாரின் தூக்கம் கலைந்தது. எப்போது விடியுமோ என காத்திருந்தார். பொழுது விடிந்ததும் அவசர அவசரமாக பொன் முகலியாற்றில் நீராடி திருக்காளத்தி நாதரை வணங்கி பூசித்து விழிபட்ட பிறகு ஈசன் கூறியதுபோல சிவலிங்கத்தின் பின்புறமான ஒர் இடத்தில் ஒளிந்துக்கொண்டார். ஆறாம் நாள் திண்ணனின் வாழ்வை மாற்றிய நாள். அன்று ஆறாம் நாள். திண்ணன் வழக்கம்போல் காட்டில் மிருகங்களை வேட்டையாடி, அதை சமைத்து, நீரையும் பூக்களையும் எடுத்துக்கொண்டு வரும்பொது பல தீய சகுனங்கள் எதிர்ப்பட்டதை உணர்ந்தான். “ஏதோ நடக்க போகிறது… குடுமி சாமிக்கு ஏதாவது பிரச்னையோ?“ என பதறி அடித்துக்கொண்டு திருகாளத்தி மலை மேல் வந்தடைந்தான். அங்கே அவன் கண்ட காட்சி அவனுக்கு பெரிய அதிர்ச்சியை தந்தது. சிவலிங்கமான குடுமி சாமியின் ஒரு கண்ணில் இருந்து ரத்தம் வடிந்துக்கொண்டிருந்தது. அதை பார்த்த திண்ணன் செய்வதறியாது திகைத்து நின்றான். அந்த அதிர்ச்சி அவனை மயக்கத்தில் தள்ளியது. தரையில் அப்படியே விழுந்தான். சில மணி துளிகள் கடந்து, மயக்கம் தெளிந்து எழுந்தான். ரத்தம் வடிந்துக் கொண்டிருந்த சுடர்விழியனின் அந்த ஒரு கண்ணில் தன் கைகளால் துடைத்து பார்த்தான். ஆனாலும் ரத்தம் வந்துக்கொண்டேதான் இருந்தது. “எவன் என் குடுமி சாமியை இப்படி காயப்படுத்தியது?“ என்று அந்த வனமும், மலையும், விண்ணும் அதிர ஆத்திரமாக சிங்கமென கர்ஜித்தான். அவன் கோப குரலை கேட்டு காட்டில் கொடிய மிருகங்களும் ஓடி ஒளிந்தது. ஒளிந்திருந்து இக்காட்சியை பார்த்துக்கொண்டிருந்த சிவகோச்சாரியார் திடுக்கிட்டு நடுநடுங்கி போனார். திண்ணனின் கண்களில் அவ்வளவு ஆக்ரோஷம். எந்த ஒரு சாமானிய மனிதர்களிடமும் இவ்வளவு ஆக்ரோஷத்தை சிவகோச்சாரியார் கண்டதில்லை. அப்போது திண்ணன் ஏதோ யோசித்தவனாக வெளியே ஒடினான்.


திண்ணனின் வாழ்வை மாற்றிய ஆறாம் நாள் அறுபத்து மூவர் வரலாறு பகுதி – 17

திண்ணன் மலை மேல் இருக்கும் குடுமி சாமி மேல் பக்தி வைக்கவில்லை, ஒரு பிள்ளை மீது பெற்றோர் பாசம் வைப்பதை விடவும் மேலான பாசத்தை கொண்டான் திண்ணன். இரவு முழுவதும் உறங்காமல் கண் விழித்து சிவபெருமானை காத்தான் திண்ணன். உலகத்தையே காக்கும் சிவன். ஆனால் திண்ணனை பொறுத்தவரை எந்நாட்டவருக்கும் இறைவனான ஈசனை திண்ணன்தான் பத்திரமாக காக்கிறான். ஒரு சிறு எறும்பு கூட சிவலிங்கத்தின் அருகில் செல்லாதவாறு காத்து வந்தான். Bhakthi Planetஸ்ரீராமர் காட்டில் இருக்கும் போது, ஒரு விநாடி கூட உறங்காமல் லட்சுமணன் கண்ணும் கருத்துமாக துணை இருந்ததை போலவே இருந்தான் திண்ணன். பொழுது விடிந்தது. தனக்காகவும் தன் குஞ்சுகளுக்காகவும் பறவைகள் உணவுக்காக தமது கூடுகளை விட்டு பறந்தது. ஆனால் திண்ணனோ தனக்காக இல்லாமல் குடுமி சாமிக்காக வேட்டைக்கு சென்றான். அத்திருகாளாத்தியின் பக்கத்திலுள்ள காட்டில் வேட்டைக்கு சென்றான்.

அங்கே பன்றியை வேட்டையாடி கொன்றான். மான்களையும் வேட்டையாடி கொன்றான். நம் வீட்டுக்கு விருந்தினர் வந்தால் பல வகையான பதார்த்தங்களை செய்து வைப்போமே அதுபோல, குடுமி சாமிக்கு பலவிதமாக இறைச்சிகளை தீ மூட்டி அம்பின் நுணியில் மிருகங்களின் கொழுப்பு மிகுந்த பகுதிகளை தீயில் இட்டு பக்கவமாக நெருப்பில் பன்றியிறைச்சியையும், மான் இறைச்சியையும் சமைத்தான். அந்த இறைச்சியில் சுவைக்காக தேனையும் கலந்தான் திண்ணன். இறைவனுக்கு பூஜைக்குரிய மலர்களை தன் குடுமியில் வைத்துக்கொண்டு, அபிஷேகத்திற்கான நீரை தன் வாயில் வைத்து, சமைத்த இறைச்சிகளை தன் கைகளில் வைத்து கொண்டு குடுமி சாமி இருக்கும் இடத்திற்கு வந்தான். சற்று நேரத்திற்கு முன்னதாக சிவகோசாரியார் பூஜித்து சென்ற மலர்களை முன்பு போல் பாதுகை அணிந்திருநத தமது கால்களால் அகற்றினான். தனக்கு தெரிந்தவரை குடுமி சாமிக்கு பூஜை செய்து, தான் சமைத்த இறைச்சியை லிங்கத்தின் முன் வைத்து, “இந்த தடவை பன்றி, மான் இறைச்சியில் தேனை ஊற்றி சமைத்து இருக்கிறேன் சாப்பிடு சாமி ருசியா இருக்கும்“ என்று கூறினான் திண்ணன். வேட்டைக்கு சென்ற மகன் வீடு திரும்பாமல் மலைமேல் இருக்கும் குடுமி சாமியே கதி என்று இருக்கிறானே என்று மனம் வருந்தினார்


திண்ணனின் தந்தையும், திண்ணனின் நண்பர்கள் நானனும் – காடனும். அதனால் திண்ணனை காட்டில் இருந்து அழைத்து வரவேண்டும் என்ற எண்ணத்தில் தேவராட்டியையும் மற்றவர்களையும் அழைத்துக்கொண்டு திண்ணனின் இருப்பிடத்திற்கு வந்தார் திண்ணனுடைய தந்தை. திண்ணனை பார்த்ததும் அழுது விட்டார். “நீ எப்படி வாழ வேண்டியவன் பைத்தியம் பிடித்ததுபோல் இந்த குடுமி சாமியே கதி என்று இருக்கிறாயே? வேடவர்களுக்கு தலைவனாக வர வேண்டிய நீ, இப்படி யாரும் இல்லாத காட்டில் தனியாக இருக்கிறாயே? இத்தனை நாட்களாக இங்கிருந்தாய் ஒரு நாளாவது உன் எதிரில் இந்த குடுமி சாமி வந்தாரா? ஏன் இப்படி நடந்துக்கொள்கிறாய்?“ என்று திண்ணனை பார்த்து அழுதும் கொஞ்சியும் பார்த்தார். கடைசியில் கோபமாக திட்டியும் பார்த்துவிட்டார். ஆனால் திண்ணன் எதற்கும் மசியவில்லை. நெருப்பில் இரும்பை போட்டால் இரும்பு கூட உருகிவிடும். ஆனால் திண்ணனின் மனமோ இரும்பை விட கடினமாக இருந்தது. அந்த அளவுக்கு குடுமி சாமி மேல் இருந்த அன்பு காரணமாக இருந்த்து. அதனால், “குடுமி சாமியை விட்டு நான் வர மாட்டேன்” என்று ஆவேசமாக கத்தினான். இனி இவனிடம் பேசி எந்த பயனுமில்லை என்ற முடிவில் காட்டை விட்டு திண்ணனின் தந்தையும் உடன் சென்றவர்களும் திரும்பினார்கள்.


குடுமி சாமியும் பசியாக இருப்பாரா?அறுபத்து மூவர் வரலாறு பகுதி – 16

திண்ணன் சிவலிங்கத்தை பார்த்ததும் காணாமல் போன தாய் -தந்தையை பார்த்தது போல கட்டிபிடித்துகொண்டான். அப்படியே பல மணிநேரம் கண்ணீருடன் இருந்தான். திண்ணனுடன் வந்த நாணனுக்கு ஒன்றுமே புரியாமல் இருந்தது. பசி வேறு அவன் வயிற்றை கிள்ளிக்கொண்டிருந்தது. “திண்ணா வா போகலாம்” என்றான் நாணன். “நாம் சென்றுவிட்டால் இந்த குடுமிசாமி எப்படி தனியாக இருப்பார்.? குடுமி சாமியும் பசியாக இருப்பாரா? அவருக்கும் நாம் உணவு தரலாம்“ என்று கூறி கொண்டே, “சாமி உங்களுக்கு உணவு கொண்டு வருகிறேன். நான் வரும்வரை நீங்கள் பத்திரமாக இருங்கள். போன வேகத்திலேயே வந்து விடுவேன்” என்று சிவலிங்கத்திடம் கூறியபடி பிரிய மனம் இல்லாமல் பிரிந்து சென்றான் திண்ணன். பொன்முகலி ஆற்றங்கரைக்கு வந்து சேர்ந்தார்கள் திண்ணனும் நாணனும். அங்கு திண்ணனின் நண்பரான காடனிடம் திண்ணன் முன்பே சொல்லி வைத்தது போல சமைப்பதற்கு காடன் தீ மூட்டி வைத்திருந்தான். இதை கண்ட திண்ணன், “சமைப்பதற்கு நெருப்பு தயாராக இருக்கிறதா?” என்று கூறிக்கொண்டே அந்த நெருப்பின் அருகில் சென்றான். அங்கு வேட்டையாடி வைத்திருந்த பன்றியை பக்குவமாக அறுத்து அதை சுத்தமாக தண்ணீரில் கழுவி சமைப்பதற்காக தயார் செய்தான் திண்ணன். திண்ணணின் சமைக்கும் அவசரத்தை பார்த்த நாணனும், காடனும் மகிழ்ச்சியடைந்தார்கள். “நமக்காக என்னமா சமைக்கிறான். நம் பசியை புரிந்துக்கொண்டான் திண்ணன்.” என்று நாணனிடம் காடன் சொன்னான்..

திண்ணன் பன்றி இறைச்சியை பக்குவமாக நெருப்பில் வதக்கி சமைத்தான். இராமாயணத்தில் சபரி என்ற மூதாட்டி ருசி பார்த்து ருசிபார்த்து ஸ்ரீராமருக்கு சாப்பிட பழங்கள் தந்தாலே அதுபோல திண்ணன், பன்றியின் தசைபகுதியை சமைத்து தன் வாயில் போட்டு பல்லால் மட்டும் கடித்து பார்த்து ருசியாக இருப்பதை மட்டும் ஒரு இலையில் வைத்தான். இதை கண்ட திண்ணனின் நண்பர்கள், “இவன் என்ன சாப்பிடாமல் வாயில் வைத்து ருசி பார்த்துவிட்டு இலையில் வைக்கிறானே” என்று காடன், நாணனிடம் கேட்டான். மலைமேல் இருக்கும் குடுமிசாமியை பார்த்ததில் இருந்தே திண்ணனின் போக்கே சரியில்லை. நான் நினைக்கிறேன் திண்ணனுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது” என்றான் நாணன். அவர்களின் பேச்சு திண்ணனின் காதில் விழவில்லை. அந்த அளவுக்கு தன் வேலையில் மும்முரமாக இருந்தான். அவசர அவசரமாக பன்றிகறியை சமைத்து ஒரு இலையில் வைத்துக்கொண்டான். இத்துடன் கொஞ்சம் பூக்களையும் பறித்துக்கொண்டான். ஒரு கையில் பன்றிகறி, மறு கையில் பூக்கள். பிறகு தன் வாயில் கொஞ்சம் தண்ணீரை நிரப்பி வைத்துக்கொண்டு திருகாளத்தி மலையை நோக்கி நடந்தான். “அடடா. இவன் இத்தனை நேரம் சமைத்தது நமக்காக இல்லையா. மலை மீது உள்ள குடுமி சாமிக்குதானா” என்று புரிந்துக்கொண்டார்கள் நண்பர்கள். மலைமேல் வேகமாக ஏறினான் திண்ணன். இதையெல்லாம் பார்த்த திண்ணனின் இரண்டு நண்பர்கள், இனி நாம் இவன் பின்னால் போனால் நம்மையும் பைத்தியகாரர்களாக்கிவிடுவான்.

முதலில் நாம் ஊருக்கு திரும்பி சென்று, திண்ணனின் தந்தையையும் மற்றவர்களையும் அழைத்து வருவோம்.” என்று கூறி அவர்கள் ஊருக்கு திரும்பி சென்றார்கள். காளாத்தி மலைமேல் இருக்கும் சிவலிங்கத்தின் அருகில் வந்தான் திண்ணன். தன் வாயில் இருந்த தண்ணீரால் சிவலிங்கத்தின் மேல் குட்டி அருவியைபோல் தண்ணீரால் அபிஷேகித்தான். இடது கையில் இருந்த மலர்களால் சிவலிங்கத்திற்கு பூக்களை சமர்பித்தான். வலது கையில் இருந்த பன்றி இறைச்சியை சிவலிங்கத்தின் அருகில் வைத்து, “சாப்பிடு சாமி.. நானே பக்குவமாக சமைத்து வந்திருக்கிறேன். நீ சாப்பிடு” என்று குழந்தையிடம் “சாப்பிடு சாப்பிடு என்று கெஞ்சுவது போல கெஞ்சினார் திண்ணன். சிவலிங்கத்தின் அருகிலேயே அமர்ந்தான். “இனி உனக்கு காவல் நான்.” என்று கூறி, அந்த மலையிலேயே உட்கார்ந்திருந்தான். இரவுபொழுது வந்தது. காட்டில் தனியாக இருக்கிறோமோ என்று சிறிதும் பயம் இல்லாமல் தைரியமாக இருந்தான் திண்ணன். அந்த தைரியத்தை யார் கொடுத்தது.? நிசசயம் இறைவன்தான். ஆம். மன தைரியம் என்று முரடனுக்கு இருக்கும். ஆனால் மன உறுதி – மன தெளிவு என்பது இறை நம்பிக்கை உள்ளவர்களுக்குதான் அமையும். அத்துடன் தன்னை சார்ந்தவர்களை காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கும்போது மரண படுக்கையில் இருந்தவன் கூட, தன் குடும்பத்திற்காக வாழ வேண்டும் என்று எண்ணி தன் உயிரை எமனிடம் இருந்து காப்பாற்ற போராடி பிழைத்தவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அதுபோல்தான், தனக்கு பிடித்த சிவபெருமான் தனியாக இருக்கறார்.

அவருக்கு பாதுகாப்பு வேண்டும் என்ற நோக்கத்தில் புலியும்,சிங்கமும் விஷபாம்பும் இருக்கும் மலைகாட்டில், வெறும் வில் அம்புடன் திண்ணன் மனஉறுதியுடன் தூங்காமல் இருந்தான். மறுநாள் விடிந்தது. வானத்தில் சூரியனை கண்டதும் குயில் கூவியது. பறவைகள் பறந்தது. விடிந்துவிட்டது, சிவபெருமானுக்கு சாப்பிட ஏதாவது தரவேண்டும். அதற்கு நாம் வேட்டைக்கு போக வேண்டும்.” என்று வில்லையும், அம்பையும் எடுத்துக்கொண்டு வேட்டைக்கு சென்றான் திண்ணன். திண்ணன் சென்ற சில நிமிடத்திலேயே திருகாளாத்தி மலையில் இருக்கும் சிவலிங்கத்திற்கு வழக்கமாக தினசரி பூஜை செய்யும் சிவகோசாரியார். அந்த இடத்திற்கு வந்தார் சிவலிங்கத்தின் அருகில் பன்றி இறைச்சி இருப்பதை கண்டு திடுகிட்டு, கடும் கோபமாக, “யார் இந்த அபசாரம் செய்தது.?” என்று திட்டிக்கொண்டே அந்த ஆலயத்தின் ஓரத்தில் இருந்த துடைப்பத்தால் சிவலிங்கத்தின் அருகில் இருந்த பன்றிகறியை பெறுக்கி தள்ளி தண்ணீர் ஊற்றி அந்த இடத்தை கழுவினார். பிறகு சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து, பூக்களை அணிவித்து தீபராதனை செய்து வணங்கி சென்றார் சிவகோச்சாரியார். சிவகோச்சாரியார் புறப்பட்டு சென்ற சில மணிநேரத்தில் திண்ணன் மீண்டும் தன் வாயில் தண்ணீரை வைத்துக்கொண்டு, கையில் இறைச்சியையும், இன்னொரு கையில் பூக்களையும் கொண்டு வந்தான். இங்கே சிவலிங்கத்திற்கு புத்தம் புதிய மலர்கள் அணிந்திருப்பதை கண்டு கோபத்தோடு, “எவன் என் குடுமி சாமிக்கு இப்படி அலங்கோலம் செய்தது. நான் இருக்கும் வரை உன்னை நான்தான் பார்த்துக்கொள்வேன்.” என்று கூறி தன் கால்களால் சிவலிங்கத்தின் மேல் இருந்த பூக்களை எல்லாம் நீக்கினார். இப்படி சிவலிங்கத்தின் மேல் கால் வைப்பது தவறு என்று திண்ணனுக்கு தெரியாது. தாயின் அரவனைப்பில் இருக்கும் குழந்தை தாயை எட்டி உதைத்தால் அது தவறு என்று தாய் நினைப்பாளா? அதுபோல்தான் சிவபெருமானும் நினைத்திருப்பார் போல. பழைய பூக்களை எடுத்துவிட்டு தன் வாயில் இருந்த தண்ணீரால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்துவிட்டு, மறு கையில் இருந்த பூக்களை சிவலிங்கத்தின் மேல் அணிவித்து, இன்னொரு கையில் தயாராக சமைத்து வைத்திருந்த பன்றி கறியை சிவலிங்கத்தின் அருகில் வைத்தான். இப்படியே காலங்கள் ஒடியது. திண்ணனுக்காக சிவகோச்சாரியாரிடம் வாதாடிய சிவபெருமான்.


திண்ணன் வாழ்வை மாற்றிய நண்பன் அறுபத்து மூவர் வரலாறு பகுதி – 15

வேடனான திண்ணன், தனது வாழ்நாளின் முதல் வேட்டைக்கு புறப்பட தயாரானான். அவனுடன் மற்றவர்களும் வேட்டைக்கு புறப்பட தயாரானார்கள். திண்ணன் வில்லை எடுக்கும் போது, “திண்ணா.. உன்னை வாழ வைக்க போகும் தெய்வம்தான் நீ கையில் எடுக்கும் வில். அதனால் முதலில் செய்யும் தொழிலை தெய்வமாக மதிக்க வேண்டும். தொழிலுக்கான மரியாதையும் தர வேண்டும். அதனால் வில்லை எடுக்கும் முன்னதாக நம் குலதெய்வத்தையும், இஷ்டதெய்வத்தையும் வணங்கி எடு. எல்லாம் வெற்றியாக அமையும்.” என்றார் திண்ணணின் தந்தை. தந்தை சொல்லே மந்திரம் என்று உணர்ந்து, திண்ணன் தன் தந்தையை வணங்கி, “எனக்கு இஷ்டதெய்வம் நீதான்“ என்று கூறி வில்லை எடுக்கும்போது ஒரு சுப ஒலி ஒலித்தது. இதை கேட்ட திண்ணனின் தந்தை மகிழ்ச்சியடைந்தார். காட்டிற்கு வேட்டையாட திண்ணன் சென்றான். யானை, புலி போன்ற மிருகங்களை வேட்டையாடினார்கள் திண்ணனும் மற்ற வேடர்களும். இப்படி பரபரப்பாக வேட்டையாடும் போது, யானைகுட்டிகளும் கருவுற்ற மிருகங்களும் அந்த காட்டில் எதுவும் நடக்காதது போல சென்றது. அதன் காரணம் என்ன? அவற்றுக்கு வேடர்கள் என்றால் பயம் இல்லையா.? இருக்கிறது! இருந்தாலும், எதையும் உணரமுடியாத குட்டி ஜீவராசிகளையும், கருவுற்ற மிருகங்களையும் கொல்லும் வழக்கம் வேடர்களுக்கு இல்லை. வேடர்களுக்கும் தர்மம் இருக்கிறது அல்லவா.

புலி போல் பாய்ந்த திண்ணன்

அப்போது, ஒரு காட்டுபன்றி, யானையே மிரண்டு ஓடும் படியாக வேகமாக ஓடியது. இதை கண்ட திண்ணன், அந்த காட்டு பன்றியை வேட்டையாட அதன் பின்னே ஓடினான். ஆனால் அந்த காட்டுபன்றி வெகுதூரம் ஓடியது. நீண்ட மலைச்சாரல் வழியே சென்றது. திண்ணம் அந்த பன்றியை விடாமல் துரத்திக்கொண்டு ஒடினான். பாயும் புலியை போல திண்ணனின் ஓட்டத்தில் வேகம் இருந்தது. “இனி நம்மால் ஓட முடியாது” என்று அந்த காட்டு பன்றி நினைத்து, களைத்துப்போய் ஒரு இடத்தில் நின்றது. ஆனால் திண்ணனுக்கு எந்த களைப்பும் இல்லை. இவ்வளவு தூரம் தன்னை ஓட விட்ட பன்றிமேல் கோபம் கொண்டு, தன் இடுப்பில் இருந்த உடைவாளை எடுத்து, அந்த பன்றியை ஒரே வெட்டாக வெட்டினான் திண்ணன். ஒரே வெட்டில் அந்த பன்றி இரண்டு துண்டுகளாக விழுந்தது. அவனை தேடி வந்த மற்ற வேடர்கள், திண்ணனின் வேகத்தையும் வேட்டையாடும் திறனையும் நேரில் பார்த்து வியந்து பாராட்டினார்கள். இப்படி கடும் முரடனாக இருக்கும் திண்ணனின் மனதை மென்மையாக்கும் ஒரு சம்பவம் நடக்க இருக்கிறது. அதை திண்ணன் மட்டுமல்ல யாரும் எதிர்பாராத சம்பவம். அதை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன், திண்ணனுடன் நாமும் கொஞ்ச நேரம் பயணிக்க வேண்டும். திண்ணன் ஒரே வெட்டில் காட்டு பன்றியை இரண்டாக பிளந்ததை கண்ட திண்ணனின் தோழர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள். திண்ணனின் வீரத்தையும், விடாமுயற்சியையும் பாராட்டினார்கள். வெகு தூரம் ஓடி வந்ததால் பசி எடுத்தது திண்ணனுக்கு. “பசிக்கிறது“ என்றான் திண்ணன். “காட்டுக்குள் வந்து ரொம்ப நேரம் ஆகிவிட்டது. எங்களுக்கும் பசிக்கிறது” என்றார்கள் நாணனும் உடன் வந்த இன்னொரு நண்பனும். “முதலில் நமக்கு தேவை தண்ணீர். தண்ணீருக்கு எங்கே போவது?“ என்றான் திண்ணன். “அதோ தெரிகிறது பார் தேக்கு மரம். அதன் அப்பால் சென்றால் நீண்ட குன்று ஒன்று இருக்கிறது. அந்த உயர்ந்த மலைக்கு பக்கத்தில் “பொன்முகலி” என்ற ஆறு இருக்கிறது. வா திண்ணா” என்று அழைத்தான் திண்ணனின் நண்பன் நாணன். உடன் இருந்த தோழனிடம், “நீ இந்த பன்றியை அந்த இடத்திற்கு எடுத்து வா. நாங்கள் முன்னே செல்கிறோம்.” என்றான் திண்ணன். நண்பன் பன்றியை சுமந்து வர, அவனுடன் பொன்முகலி ஆற்று பகுதிக்கு வந்தார்கள் திண்ணனும் நாணனும். “பன்றியை சமைக்க தீக்கடைக் கோலால் தீயை உண்டாக்கு. நான் வந்து சமைத்து தருகிறேன்“ என்றான் நண்பனிடம் நாணன். “சரி” என்ற அந்த நண்பனும் தீயை உண்டாக்கும் முயற்சியை செய்தான். “நாம் அதுவரை அந்த மலை அடிவாரத்திற்கு சென்று வருவோம் வா.” என்று நாணனிடம் சொன்னான் திண்ணன். பொன்முகலி ஆற்றில் இறங்கி அவ்வாற்றைக் கடந்து திருகாளத்தி மலை அடிவாரத்தை அடைந்தார்கள். திருகாளத்தி மலை ஏறினார்கள். மலை ஏற ஏற திண்ணனின் மனதில் பரவசம் உண்டானது. பசி மறைந்தது. மனம் அமைதி அடைந்தது. ஏதோ ஒரு சக்தி மலை மேல் இருந்தபடி தன்னை அழைப்பது போல உள்ளுணர்வு சொன்னது. மகிழந்தான் திண்ணன். “நாணா.. எனக்குள் ஏதோ ஒரு மாற்றம் ஏற்படுகிறது. அதை எப்படி சொல்வது? என்று தெரியவில்லை.” என்றான் திண்ணன். திருகாளத்தி மலை உச்சியை அடைந்தார்கள். “இது என்ன மலை? இவ்வளவு பெரியதாக இருக்கிறது.” என்று வியந்தபடி கேட்டான் நாணனிடம் திண்ணன். “இந்த மலை மேல் குடுமி தேவர் என்பவர் இருக்கிறார் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்.” என்றான் நாணன். “குடுமி தேவரா? யார் அவர்.?” என்று கேட்டான் திண்ணன். “அது வந்து….. அது ஏதோ ஒரு சாமீ” என்றான் நாணன் “அந்த சாமீயை வணங்கி விட்டு வருவோம் வா“ என்று நாணனை அழைத்துக்கொண்டு மேலும் மலையில் முன்னேறினான் திண்ணன்.

மாற்றம் தெய்வ இரகசியம்

ஒருவனின் வாழ்க்கை எப்படி மாறும்? எப்போது மாறும் என்பது யாருக்கும் தெரியாது. எடுக்கும் முயற்சி நன்றாக இருந்தால் அதன் முடிவு வேறு மாதிரி இருந்தாலும் அதுவும் சரியாகவே இருக்கும். நினைப்பதெல்லாம் நினைத்த மாதிரி நடக்க நம் செயலில் எதுவும் இல்லை. எல்லாம் இறைவன் செயல். இது திண்ணனின் வாழ்விலும் பொருந்தியது. வேடர்களுக்கு தலைவனாக தமக்கு அடுத்ததாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார் திண்ணனின் தந்தை. ஆனால் இறைவனின் விருப்பமோ வேறு விதமாக இருக்கிறது. இறைவனின் விருப்பம்தான் இறுதி முடிவு. குடுமி தேவரை பார்க்க ஆர்வமாக வந்த திண்ணன், அங்கே ஒரு சிவலிங்கம் இருப்பதை கண்டான். “நாணா…நீ சொன்ன குடுமி தேவர் இவர்தானே” என்று சொன்னப்படி சிவலிங்கத்தை கட்டி அனைத்துக்கொண்டான் திண்ணன். தன் தாய்-தந்தையை பார்த்தவுடன் ஓடி வந்து கட்டி அனைத்துக்கொள்ளும் ஒரு குழந்தையை போல மாறினான் திண்ணன். திண்ணனின் கண்களில் தாரை தாரையாக கண்ணீர். திண்ணனின் கண்களில் இருந்து இதுவரை கண்ணீர் வந்து பார்த்ததில்லை நாணன. அதை கண்ட நாணன் திண்ணனுக்கு என்ன ஆனது? ஏன் இப்படி செய்கிறான்? என்று ஒன்றும் புரியாமல் விழித்தான். மனிதர்களின் வாழ்வில் புரியாத புதிர்கள் ஏராளம். இறைவனின் அடுத்த திருவிளையாடலை இறைவனின் அடியார்களே யூகிக்க முடியாத போது, நடப்பது என்ன என்று இந்த நாணனால் எப்படி புரிந்துக்கொள்ள முடியும்.? திண்ணனின் சிவதொண்டை கண்டு திகைத்த இன்னொரு சிவதொண்டர். யார் அவர்.? சொல்கிறேன்.

கண்ணப்ப நாயனார் -அறுபத்து மூவர் வரலாறு பகுதி – 14

குண்டக்கல் அரக்கோணம் ரயில் பாதையில் உள்ள இராசம் பேட்டைக்கு அருகில் உள்ளது உடுக்கூர். இது முன்னொரு காலத்தில் உடுப்பூர் என்று அழைக்கப்பட்டது. இந்த ஊரில் பிறந்தவர் நாகன். இவர் வேடவர்களுக்கு தலைவர். இவருடைய மனைவி பெயர் தத்தை. வேடவர் குலத்தில் பிறந்தவளான இவளிடத்தில் தைரியம் அதிகமாகவே திகழ்ந்தது. தத்தை நடந்து வந்தால் சிங்கம் நடந்து வருவது போல் இருக்குமாம். அந்த அளவில் வீர நடையில் வருவாள். கணவருக்கு ஏற்ற மனைவி என்று காண்போர் அனைவரும் போற்றும்படியான நல்ல குணமும் கொண்டவள் தத்தை. நாகன் – தத்தையின் ஒற்றுமையை கண்டு, சிவ-சக்தி என்றும் ஊர்மக்கள் புகழ்வதும் உண்டு. நாகன் வேடவர்களுக்கு அரசராக இருந்தார்.

பல வசதிகள் இருந்தும் குழந்தை செல்வம் இல்லையே என்று வருந்தினார்கள் இந்த தம்பதியினர். “வயதும் கூடி கொண்டே போகிறது. இனி உங்களுக்கு பிள்ளை பிறக்காது. அதனால் ஒரு குழந்தையை தத்து எடுத்துக்கொள்ளுங்கள் என்றார்கள் உறவினர்கள். “தத்து எடுப்பது பற்றி எங்களுக்கு பிரச்னையில்லை. ஆனால் அந்த குழந்தை வளர்ந்து பெரியவனான பிறகு, நீங்கள் என்னை பெற்றவர்கள் இல்லை என்கிறார்களே என்று அந்த பிள்ளை கூறிவிட்டால், அந்த துன்பம் தரும் சொல்லை எங்களால் தாங்க முடியாது. பாசத்தை கொட்டி வளர்த்து கவலையை பெறுவதை விட, பிள்ளை இல்லா குறையோடு இறந்து போவது நல்லது.” என்றாள் தத்தை. இதை கேட்ட பெரியவர் ஒருவர், “நீங்கள் முருகப் பெருமானை வணங்குங்கள். உங்களுக்கு பிள்ளை பிறப்பான். சஷ்டியில் விரதம் இருந்தால், நிச்சயம் உன் வயிற்றில் பிள்ளை பிறப்பான். அத்துடன் முருகப்பெருமான் நம் வேடவர் குலத்தில் பிறந்த பெண்ணைதான் மணந்தார். அதனால் முருகனும் நமது உறவினர்தான். நம் உறவினரான முருகன், நமக்கு உதவாமல் வேறு யாருக்கு உதவ போகிறார்.?” என்றார் தத்தையிடம் அந்த பெரியவர். பெரியவர் சொன்னதை இறைவனின் அருள்வாக்காக எண்ணி, “உடனே முருகப்பெருமானை வழிபட ஏற்பாடு செய்யுங்கள்.” என்றாள் தன் கணவரிடம் தத்தை. நாகனும், தத்தையும் முருகப்பெருமானின் கோவிலுக்கு சென்று முருகனை வணங்கி, சேவல் – மயிலை கோவிலுக்கு காணிக்கையாக தந்தார்கள்.

கோவிலை மலர்களால் அலங்கரித்தார்கள். மிகபெரிய திருவிழாவே நடத்தினார்கள். என்னென்ன அபிஷேகங்கள் உள்ளனவோ அவ்வனைத்தையும் விடிய விடிய முருகப்பெருமானுக்கு செய்தார்கள். தாயானாள் தத்தை முருகப்பெருமானின் கருணை கிடைத்தது. தத்தை சில நாட்களிலேயே கருவுற்றாள். பத்தாவது மாதத்தில் அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள். கருப்பு நிறத்தை விரும்பாதவர் கூட கண்ணன் பிறந்ததும் அவன் கருப்பு முகமும் தெய்வீக அழகு என்று போற்றியது போல, தத்தை பெற்ற குழந்தையும் கருப்பாக இருந்தாலும் கலையாக இருந்தான். நம் நாட்டுக்கு இளவரசன் பிறந்துவிட்டான் என்று மக்கள் கொண்டாடினார்கள். தனக்கு வாரிசு பிறந்துவிட்டான் என்று தந்தையான நாகன் மகிழ்ந்தார். தங்கள் குழந்தைக்கு “திண்ணன்” என்று பெயர் சூட்டினார்கள். குழந்தை பிறக்காதா என்று ஏங்கிய தம்பதிகளுக்கு வாரிசு பிறந்ததால் கோலகலமாக விழா எடுத்தார்கள். திண்ணனின், குறும்பும் சுறுசுறுப்பும் அனைவரையும் கவர்ந்தது. தனக்கு பிறகு நாட்டை ஆளப்போகும் திண்ணன், வேட்டையாடும் கலையை கற்கவேண்டும் என்று விரும்பினார் நாகன். திண்ணன் நாட்டை ஆள பிறந்தவன் இல்லை. உலகை ஆளப் பிறந்தவன். எந்நாட்டவருக்கும் இறைவனான ஈசனுக்கு பிரியமானவன் என்று உலகமே போற்றி வணங்கும் நாயன்மார்களில் ஒருவராக திகழ போகிறார் என்பதை அறியாமல், வேட்டையாடும் கலையை கற்று கொள் என்றார் நாகன். அப்படி கற்று கொண்டால்தான் எனக்கு பிறகு நீ சிம்மாசனத்தில் அமர்ந்து ராஜ்யத்தை ஆள முடியும் என்றார் நாகன். மிருகத்தை வேட்டையாட சென்ற இடத்தில், திண்ணனின் மனதை வேட்டையாடினார் ஒருவர்.